ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று மாத்தறை கம்புறுப்பிட்டிய பகுதியில் நடந்தபோது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக காலி சிறைச்சாலையில் இருக்கும் 44 கைதிகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் தேர்தல் சட்டங்கள் மாத்திரமல்லாமல், சிறைக் கைதிகள் குறித்த சர்வதேச சட்டங்களும் மீறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அத்துடன், அந்தக் கூட்டத்துக்காக சிறைச்சாலைகள் துறைக்கு சொந்தமான வாகனங்களும், ஏனைய உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.