ஐரோப்பிய ஒன்றியத்தை தங்களிடமிருந்து விலகித் தனியாக நிற்கும் ஒரு அமைப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள் என்றும், மக்கள் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் அது சட்டங்களை இயற்றியுள்ள குற்றங்களுக்கு ஆளாகியுள்ளது என்றும் போப் தமது உரையில் கூறினார்.
நீடித்திருக்கக் கூடிய வகையில் இல்லாமல், சமூகத்தின் சில உறுப்பினர்கள் சுயநலத்துடன் கூடிய ஆடம்பரமான, டாம்பீகமான வாழ்க்கையை வாழ்க்கிறார்கள் என்றும் போப் குறைகூறியுள்ளார்.