இந்த சர்ச்சை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய தேயிலை வாரியம், கிரீன் பீஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட அனைத்து தேயிலை தூள் மாதிரிகளும், இந்திய சட்ட விதிகளை பின்பற்றியே உற்பத்தி செய்யப்பட்டதாகவும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் தான் அவை இருப்பதாகவும் இந்திய தேயிலை வாரியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.