பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் மீது தாக்குதல்: 23 பேர் பலி

திங்கள், 9 ஜூன் 2014 (16:30 IST)
ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப்புற நகராகிய டாப்டானில், ஷியா முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏறக்குறைய 23 பேர் கொல்லப்பட்டனர்.
 
ஈரானிலிருந்து பாகிஸ்தான் திரும்பிக்கொண்டிருந்த ஷியா புனித யாத்ரிகர்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாண அதிகாரிகள் கூறினர்.
 
இந்தத் தாக்குதலை நடத்தியதற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்