யுத்தத்துக்கு பின்னரான இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்கிவருகின்ற சீனா, அங்கு நெடுஞ்சாலைகள், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு விமானம் நிலையம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.
"முத்துச்சரம்" என்று வர்ணிக்கப்படுகின்ற இடங்களை இந்தியாவைச் சுற்றிலுமாக உருவாக்கி, பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா முயல்கிறது என்று தெரிவிக்கப்படும் கூற்றுக்களை சீனா மறுத்துவந்துள்ளது. இருந்தபோதிலும். இலங்கையை 'அற்புதமான ஒரு முத்து' என தான் பயணம் கிளம்பும் நேரத்தில் அதிபர் சீ வர்ணித்திருந்தார்.