ஜெரூசலத்தில் கடந்த பல வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் ஒன்றில், யூத வழிபாட்டிடம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஆகியவற்றுடன் நுழைந்த இரு பாலத்தீனர்கள், அங்கு வழிபாட்டாளர்கள் 4 பேரைக் கொன்றதுடன் மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளனர்.