கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த வேட்டையை ஜப்பான் நிறுத்தி வைத்திருந்தாலும், நாட்டின் மீன் துறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் கட்டுபடுத்தப்பட்ட வகையில் இந்த வேட்டை முன்னெடுப்படும் என அறிவித்துள்ளது.
புதிய திட்டத்தின்படி, ஆண்டொன்றுக்கு பிடிக்கப்படும் மின்க் வகைத் திமிங்கிலத்தின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்பட்டு, 300க்கும் சற்றே அதிகமானவை மட்டுமே வேட்டையாடப்படும்.