இந்தோனேசியாவின் புதிய அதிபர் ஜொக்கோ விடோடோ (Joko Widodo), தனது மகனின் பட்டமளிப்பு விழாவுக்காகச் சிங்கப்பூருக்குச் செல்வதற்கு விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணம் செய்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது சொந்தத் தேவைக்கான பயணம் என்பதால், தனது தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல், பொது விமானத்தில் பயணித்துள்ள இந்தோனேசியாவின் புதிய அதிபர் தனது சொந்தப் பணத்திலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதே வேளை, அதிபர் விடோடோ, சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகுபவர் என்று பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.