இந்தோனேஷியாவின் மேற்கிலுள்ள சுமத்ரா குடியிருப்புப் பகுதியில், ஒரு இராணுவ போக்குவரத்து விமானம் இடிந்து விழுந்த விபத்தில், 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இதுவரை குறைந்தது 49 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வரவேண்டும் என்று அந்த விமானி, விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் கேட்டுக்கொண்டதாக விமானப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.