தடகள விளையட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதே மிகவும் முக்கியமானது என்று, கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்த கோ கூறுகிறார்.
விளையாட்டில் ஊக்க மருந்து பயன்பாட்டைத் தடுப்பது தொடர்பில், சுயாதீனமான அமைப்பு ஒன்று தேவை என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தடகளப் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்படுத்துபவர்கள் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். எதிர்வரும் 22ஆம் தேதி பீஜிங்கில் உலகத் தடகளப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.