துனீசியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி

வெள்ளி, 26 ஜூன் 2015 (18:07 IST)
துனீஷியாவில் உள்ள சுஸ் நகரில், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

தாக்குதல் நடத்திய ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

துனீசியாவில் சுஸ் நகரம் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வருகைதரும் நகரமாகும்.

துனீஷியாவின் தலைநகரான துனிசில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

பிபிசியிடம் பேசிய அந்நாட்டின் உள் துறை அமைச்சர், தற்போது பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவருவதாகவும் சிலர் இறந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்