ஆஸ்திரேலியாவில் கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரை சுறா ஒன்று தாக்கிய சம்பவத்தை அடுத்து இரண்டு பெரும் வெண் சுறாக்களை அதிகாரிகள் கொன்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பான, ஹ்யூமேன் சொசைட்டி இண்டர்நேஷனல், இந்த சுறாக்களைக் கொல்வது என்பது எதிர்காலத்தில் இது போல நடக்கக்கூடிய தாக்குதல்களைக் குறைத்துவிடாது என்று கூறியது.