கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாகியிருக்கிறார்.
இந்தியாவில் பிறந்தவரான 43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.
கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரின் சொத்து மதிப்பைவிட இது இன்னும் குறைவே - அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா சுமார் 34 பிலியன் டாலர்கள் சொத்து இருப்பதாக கருதப்படுகிறது.