ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஆரம்பித்துள்ள ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உலக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது சம்பந்தமாக தாம் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை இரண்டு சதவீதப் புள்ளிகள் அதிகரிக்க வழி தேடினால் போதும், அதன் மூலமாக கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும், லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான பொருள் உற்பத்தியையும் உருவாக்கிட முடியும் என்று அப்பாட் கூறினார்.