பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகளின் கூட்டமைப்பான G-7 அமைப்பின் உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடந்துவருகின்ற நிலையில், அதன் இரண்டாம் நாள் கூட்டத்தில் மேற்கு உலகத் தலைவர்கள் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி கவனம் செலுத்தவுள்ளனர்.
இந்த சந்திப்பையடுத்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கும், பிரிட்டன், பிரான்ஸ் தலைவர்களுக்கும் இடையில் பாரிஸ் நகரில் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. வாய்ப்பிருந்தால் ஜெர்மனியின் தலைவரும் இதில் கலந்துகொள்வார்.