குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில்: குறைந்தது 24 பேர் பலி

வியாழன், 28 ஜனவரி 2016 (22:06 IST)
குடியேறிகளை ஏற்றிக்கொண்டு கிரேக்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில், குறைந்தது இருபத்தி நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக கிரேக்கத்தின் கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
 

 
துருக்கியிலிருந்து புறப்பட்ட இந்த படகு ஏகியன் கடற்பரப்பில் கவிழ்ந்ததாக தெரிவித்துள்ள அவர்கள், சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள் எனவும் கூறியுள்ளனர்.
 
இந்த படகு கவிழ்ந்த சாமோஸ் தீவை ஒட்டிய கடற்பரப்பிலிருந்து பத்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், மற்றவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த இரண்டு நாட்களில் அங்கு மூழ்கிய இரண்டாவது படகு இதுவாகும்.
 
கோஸ் தீவுக்கு அருகில் புதன்கிழமை மற்றொரு படகு மூழ்கியதில், இரு குந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்