கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பு, தேவாலயங்களின் தேசிய மன்றம், இவாஞ்ஜெலிக்கல் உறுப்புரிமைக் கழகம் ஆகியவற்றின் கூட்டமைப்பான தேசிய ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25ஆம் தேதியை நல்ல ஆளுமைக்கான தினமாக கொண்டாடப்போவதால் அன்றைய தினம் பள்ளிக்கூடம் திறக்கப்பட வேண்டும் என நவோதயா போன்ற பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறி அந்த நடவடிக்கையும் கிறிஸ்தவ அமைப்புகள் கண்டித்துள்ளன.