கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பயங்கரவாத செயல்களுக்காக ஆட்களை சேர்த்தது மற்றும் தாக்குதல்களுக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக மற்றொருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களின் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்ட காவல் துறையினர், இராணுவ உடை மற்றும் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரப் பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஆயுதங்களையோ வெடிப்பொருட்களையோ கண்டுபிடிக்கவில்லை. பாரிஸ் தாக்குதல்களுடன் இந்த விசாரணைகளுக்கு தொடர்பு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.