குண்டுவெடிப்பில் சந்தேக நபர் கைது செய்தி திரும்பப் பெறப்பட்டது

புதன், 23 மார்ச் 2016 (21:15 IST)
ப்ரஸ்ஸல்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியிட்ட செய்திகளை பெல்ஜிய ஊடகங்கள் திரும்பப் பெற்றுள்ளன.
 

 
ஜாவுண்டம் விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பெல்ஜிய ஊடகங்கள் முன்பு கூறியிருந்தன.
 
விமான நிலையத்திலும் மெட்ரோ நிலையத்திலும் செவ்வாய்க் கிழமையன்று நடந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.
 
இந்த கைது சம்பவம் குறித்தோ, பிற சந்தேக நபர்களின் அடையாளம் குறித்தோ அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்