நாற்பத்தி ஆறாயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, கருவகப் புற்றுநோயை கண்டறியும் தற்போதைய பரிசோதனையைவிட, இரத்தப் பரிசோதனை மூலம் இரண்டு மடங்கு துல்லியமாக கருவகப் புற்றுநோயை கண்டறியமுடியும் என்று தெரியவந்திருக்கிறது.
அதேசமயம் கருவகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் உயிரை பாதுகாக்கும் அளவுக்கு இந்த நோயின் துவக்கத்திலேயே இரத்தப் பரிசோதனைகள் மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியுமா என்பது குறித்து மேலதிக சோதனைகள் நடத்தப்படவேண்டியது அவசியம் என்றும் இந்த பரிசோதனைகளை மேற்கொண்ட லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.