அரசு விதித்துள்ள இந்தத் தடை பல்லாயிரக்கணக்கானவர்களை வேலை இழக்கச் செய்துவிடும் என்றும் பொதுமக்களுக்கு இதனால் பெரும் தொல்லைகள் ஏற்படும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். குறிப்பாக தமது அன்றாட பயணத்தேவைகளுக்கு ஆட்டோக்களை சார்ந்திருக்கும் நடுத்தரவர்க்கத்தினரும், ஏழைகளும் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.