இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள் அனைவரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் குழு திருப்பதி சென்று, இறந்தவர்களின் உடல்களை திரும்பப் பெற்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.