அலெக்ஸ சால்மண்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்காட்லாந்து சுதந்திரக் கோரிக்கை தோல்வியடைந்தது. 'ஒரு தலைவராக எனது காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான பிரச்சாரம் தொடரும், அந்தக் கனவு மரணித்துவிடாது' என்று அலெக்ஸ் சால்மண்ட் கூறினார்.
வரும் நவம்பரில் நடக்கவுள்ள ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் மாநாட்டின்போது கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், அக்கட்சியின் உறுப்பினர்களிடையே நடத்தப்படும் வாக்கெடுப்பைத் தொடர்ந்து புதிய தலைவர் ஒருவர் தெரிவானதும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக அலெக்ஸ் சால்மண்ட் தெரிவித்தார்.