ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

Prasanth K

திங்கள், 30 ஜூன் 2025 (07:20 IST)
கிரகநிலை:
லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், குரு - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:
02.07.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
03.07.2025 அன்று  ராசியில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
17.07.2025  அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   ராசிக்கு  மாறுகிறார்.
17.07.2025 அன்று புதன் பகவான் ராசியில்  இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.07.2025  அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.07.2025  அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
பணவரவை அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கடக ராசியினரே இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். .

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி வழிபடுவீர்கள்.

தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய தொழில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நல்ல படியாக நடந்தேறும். புதிய ஆர்டர்களும் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அரசியல் துறையினருக்கு சாதகமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம்  வரலாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை  முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

புனர்பூசம் 4 ஆம் பாதம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். உடன் பிறந்தவர்களிடம் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் உள்ளவர்களை திருப்தி படுத்த நீங்கள் மிகவும் உற்சாகமாக செயல் படுவீர்கள். தூரத்து உறவினர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். உடல் நலத்திலும் அக்கறையுடன் செயல்படுங்கள்.

ஆயில்யம்
இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்பட்டு மறையும். நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தி பகவானுக்கு பாலாபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 17, 18, ஜூலை 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 02, 03, 29, 30, 31

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்