தமிழ்.வெப்துனியா.காம்: குருப் பெயர்ச்சி நடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கென்று உள்ள முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனை, பாலாற்றுப் பிரச்சனை போன்ற பிரச்சனைகளில், தற்போது ஆட்சி மாறியிருக்கக் கூடிய இந்தச் சூழலில் முன்னேற்றம் ஏதும் ஏற்படும் சாத்தியம் உள்ளதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: எந்தப் பிரச்சனையிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பே கிடையாது. பிரச்சனைகள் மேலும் பெரிதாக ஆவதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. தவிர, இந்தப் பிரச்சனைகளில் சுமூகமான தீர்வை எட்டுவதற்கும் வாய்ப்பும் இல்லை. சாதகமாக நடப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. பிரச்சனைகள் மேலும் அதிகமாகி போராட்டங்களில் கொண்டுபோய் விடுவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது.