தண்ணீர் உலகளாவிய பிரச்சனையாகுமா?

வெள்ளி, 16 ஜூலை 2010 (13:57 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: பொதுவாக, ஆட்சிகள், ஆட்சியாளர்கள் மத்தியிலும் சரி, இன்னும் உலகளாவிய அளவில் சர்ச்சையாகக் கூட இருக்கிறது. அது என்னவென்றால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், அதுவே நாடுகளுக்கிடையே பெரிய பிரச்சனையாகவும் மாறும் என்பது. பிரதமர் மன்மோகன் சிங் கூட பேசியிருக்கிறார். இதுபற்றி ஜோதிடம் கூறுவது என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வி்த்யாதரன்: கிரகங்கள் சுழற்சியை வைத்துப் பார்க்கும் போது, குரு ஒரு வருடத்திற்கு ஒரு வீடு இருக்கக் கூடியவர். தற்பொழுது திடீரென்று அதிசாரத்தில் வேறு இடத்திற்குப் போயிருக்கிறார். இதுபோல கிரகங்களின் போக்குகள், அசைவுகள் இதெல்லாம் உள்ளுக்குள் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரியான மாற்றங்கள், மனித எண்ணங்கள் ஏற்படுகிறது.

பஞ்ச பூதங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுவிட்டது. காற்று, நீர், நெருப்பு இதெல்லாம் இல்லாமல், ஆகாயம் மாசு பட ஆரம்பித்துவிட்டது. பூமி படுமோசமாகிவிட்டது. இதெல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நீர்ப் பற்றாக்குறை என்பது இந்தியாவில் உண்டு. தண்ணீர் இருக்கிறது ஆனால் பயன்படுத்த முடியவில்லை என்று சொல்வார்களே அந்த நிலை வரப்போகிறது.

இதைவிட படுமோசமாக ஆகப்போவது காற்றுதான். காற்று மிகவும் மாசுபட்டு, தற்பொழுது தண்ணீர் வாங்கிக் குடிப்பது போல், ஒரு பாக்கெட் ஆக்சிஸன் கொடுங்கள் என்று வாங்கி அதை சுவாசிக்கக்கூடிய நிலை எல்லாம் வரப்போகிறது. ஏனென்றால், கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்க்கும் போது அதைத்தான் காட்டுகின்றன. பல யுகங்களில் ஒன்று கலியுகம். கலியுகம் என்பது கண் எதிரில் அழிவைக் காட்டுவது. அது மாதிரி இது காட்டக்கூடியது. இதுபோன்ற சில விடயங்கள் நடக்கப் போகிறது. இதெல்லாம் விரைவிலேயே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் எல்லோரும் ஒரு இடத்தில்தால் கூட வேண்டும் என்ற நிலை உருவாகும். வளமாக இருந்த இடங்கள் சதுப்பு நிலமாகவும், பாலை நிலமாக மாறுவதற்கும், பாலையாக இருந்தது கொஞ்சம் வளமாக மாறுவதற்குமான மாறுபாடுகள் வரப்போகிறது. அந்த அளவிற்கு எல்லாமே மாறப்போகிறது.

குறிப்பாக சனி. இப்போது சூரிய ஆதிக்கமுள்ள வீடுகளில் போய்க் கொண்டிருக்கிறார். அதற்கடுத்து சந்திர ஆதிக்க வீடுகள் வரும். குறிப்பாக, விருச்சிகத்திற்கு சனி வரும் போதெல்லாம் நீர்ப் பாற்றாக்குறை அதிகமாகிவிடும். விருச்சிகத்திற்கு சனி 2014 போல வரும்போது இதையெல்லாம் நாம் சந்திக்க நேரிடும். அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்