க‌ன்‌னி ரா‌சி‌க்கா‌ர‌ர்களு‌ம் ம‌னித நேயமு‌ம்!

வியாழன், 17 மார்ச் 2011 (19:57 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கன்னி ராசிக்காரர்களுக்கு மனித நேயம் அதிகம் என்றும், மனித நேயம் மாறாதவர்கள் என்றும் கூறியிருக்கிறீர்கள். இதற்கு காரணம் என்ன?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: அந்த ராசிக்குரிய கிரகம் புதன்தான் அதற்குக் காரணம். மிதுன ராசியும் புதனுடைய ராசிதான். கன்னி ராசியும் புதனுடைய ராசிதான். மிதுனத்தில் புதன் ஆட்சி அடைகிறார். கன்னியில் புதன் உச்சமடைகிறார். அதனால்தான் கன்னி புதன் இளகிய புதன், இளகிய மனப்பான்மையாகவும் இருக்கிறது.

பொதுவாகவே புதனுடைய அம்சம் என்னவென்றால், பிரதிபலன் பாராமல் உதவுபவர்களாக இருப்பார்கள் கன்னி ராசிக்காரர்கள். வருகிறவர்கள், போகிறவர்களுக்கெல்லாம் எதிர்பார்ப்பில்லாம் உதவுவார்கள். ஏனென்றால் அது புதனுடைய இயல்பு குணம். பிறகு எழுதுவது, படைக்கும் சக்தி, கிரியேட்டிவிட்டி இதெல்லாமே அவர்களுக்கு நிறைய இருக்கும். தன்னைச் சார்ந்தவர்கள், தன் சமூகம், தன் இனம் அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் புதனுடைய அம்சத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.

எந்த லக்னம், எந்த ராசியாக இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் புதன் வலுவடைந்திருந்தால் அவர்களுக்கும் இந்த குணம் மேலோங்கி இருக்கும். மனித நேயம், மனிதாபிமானம், பலன் பாராமல் உதவுதல். டூவீலரில் செல்லும் போது நிறுத்தி ஏற்றிச் செல்வது, ஏன் சோர்வாக இருக்கிறீர்கள், க·பி சாப்பிட்டுவிட்டு போகலாமா என்று கேட்பது இதெல்லாம் புதனுடைய இயல்புத்தன்மை.

ஒவ்வொரு கிரகத்திற்குமே ஒரு இயல்பு இருக்கிறது. அப்படி புதனுடைய இயல்பு என்று இதனைச் சொல்லலாம். அந்த இயல்புத்தன்மைக்கு அதிகமாக உள்ளவாது கன்னி ராசி. அதனால்தான் கன்னி ராசியை அவ்வாறு குறிப்பிடுகிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்