‌‌சி‌த்‌திரை மாத சா‌மி ‌வீ‌தி உலா எத‌ற்காக?

திங்கள், 29 ஆகஸ்ட் 2011 (21:06 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சித்திரை மாதங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் சாமியை ஒவ்வொரு வாகனங்களில் வைத்து வீதி வலம் கொண்டு வருவது எதற்காக?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சித்திரை மாதம் பொதுவாக அக்னிக்குரிய மாதம். சூரியன் உச்சமடையக்கூடிய மாதம். அந்த மாதத்தில் பொதுவாகவே உடல் வெப்பநிலை கொஞ்சம் மாறும். அதனால்தான் இதுபோன்ற விஷாக்கோலங்கள் கொண்டு மனதில் ஏற்படக்கூடிய தீய எண்ணங்கள் போன்று எதையும் வளர்த்துக் கொள்ளாமல், ஒரு விழா என்று 100 முதல் 1,000 பேர் வரை கூடி அதில் நமது மனதையும், கவனத்தையும் செலுத்தினால் வக்கிர புத்தியெல்லாம் கொஞ்சம் வராமல் இருக்கும்.

அதனால்தான் சித்திரை மாதத்தை விஷாக்கோல மாதமாகவே மாற்றியது. வேலை இல்லாத நேரத்தில்தான் கூடிக் கழித்தல், கொண்டாட்டங்கள் எல்லாமே. அதற்கு இறைவனையும் சாட்சியாக சேர்த்துக் கொள்வது, நீயும் எங்களுடன் இரு என்று.

வெப்துனியாவைப் படிக்கவும்