குரு பகவான் விரயஸ்தானத்தில் இருப்பதால்...

திங்கள், 29 நவம்பர் 2010 (18:06 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: குரு பகவான் விரயஸ்தானத்தில் இருப்பதால்... என்று கூறப்படுகிறதே? இதன் அர்த்தம் என்ன? விரயஸ்தானம் என்றால் என்ன?

ஜோ‌திட ர‌த்னா க.ப‌.‌வி‌த்யாதர‌ன்: 12ஆம் இடம் என்பது விரயஸ்தானம். ஒவ்வொருத்தருக்கும் ராசி, லக்னம் என்று இரண்டு இருக்கிறது. ராசி, லக்னம் என்பது முதலிடம், லக்னம் என்பது முதலிடம். இப்படி ஒன்று, இரண்டு, மூன்று என்று வரும்போது 12 என்பது விரயஸ்தானம். 12இல் குரு இருந்தால் நிறைய சுபச் செலவுகள் ஏற்படும்.

உதாரணத்திற்கு, இப்பத்தான் ஷீரடி போய்வந்தேன், பத்ரிநாத் போனேன், கேசரிநாத் போனேன் என்று சொல்வார்கள். இப்படி 12ல் குரு இருந்தால் ஆன்மிகத்திற்காக அதிகமாகச் செலவு செய்வார்கள்.

இதுதவிர, கல்வி, நூலகம் போன்று நல்ல செலவுகள், நல்லவர்களுக்கான செலவுகள் இதையெல்லாம் செய்ய வைக்கும். ஆன்மிகச் செலவுகளை வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்