மூவ‌ரி‌ன் மரண த‌ண்டனை குறை‌ப்பு கைகூடுமா?

செவ்வாய், 13 செப்டம்பர் 2011 (20:07 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய தண்டனை குறைப்பிற்காக, விடுதலைக்காக பல்வேறுபட்ட முயற்சிகள் நடைபெறுகிறது. இதெல்லாம் கை கூடுமா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: அந்த மூவரினுடைய அமைப்பு நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், தற்பொழுது நிலையை வைத்துப் பார்க்கும் போது நிறைவேறுவது கொஞ்சம் கடினம். ஏனென்றால், தற்பொழுதுள்ள கிரக அமைப்புகள் அதுபோல உள்ளது. குரு தற்பொழுது மேஷத்தில் உட்கார்ந்திருக்கிறார். குரு உட்கார்ந்திருக்கும் மேஷம் என்பது செவ்வாயினுடைய வீடு.

அதனால் ஆட்சியாளர்கள் கை ஓங்கி அதனுடைய அமைப்பிற்குதான் வரும். ஒரு ஆட்சியாளர் ஒத்துக்கொண்டாலும், மறு ஆட்சியாளர் ஒத்துக்கொள்ளாத அமைப்புதான் உள்ளது. ஏனென்றால், குரு மேஷத்தினுடைய அமைப்பு, ஒருத்தர் தீர்மானத்தை நிறைவேற்றினால், அதை மற்றொருவர் அப்படி இருக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்வார்.

வெப்துனியாவைப் படிக்கவும்