குரு பூ‌மி‌க்கு அரு‌கி‌ல் வ‌ந்‌திரு‌ப்பதா‌ல்...

வெள்ளி, 29 அக்டோபர் 2010 (18:22 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: குரு பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. இதனால் நன்மை, தீமை ஏதாவது ஏற்படுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: தனம், பலம், தங்கம் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு பகவான். இவர் அருகில் வந்தாலே விலைவாசியெல்லாம் உச்சத்தில்தான் இருக்கும்.

தற்பொழுது பூமிக்கு அருகில் வந்துள்ள குரு கிட்டத்தட்ட மே 7 ஆம் தேதி வரையிலும் அருகிலேயே இருப்பார். இந்த காலகட்டத்தில் பொதுவாகவே அனைத்தும் உச்சமாகவே இருக்கும்.

விலையுயர்ந்த பொருட்களான தங்கம் போன்றவைகளின் விலைகள் அதிகரிக்கும். இதே நேரத்தில் பதுக்குகிறவர்களும் அதிகரிப்பார்கள். ஆனால், எது எப்படியிருந்தாலும் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள் என்பார்களே அந்த நிலையும் இருக்கும்.

மேலும், குருதான் ஆண் வாரிசுகளுக்கு உரிய கிரகம். எனவே, ஆண் பிள்ளை பிறப்பு அதிகரிக்கும். இதுதவிர, கல்வி, வேதம், மந்திரம் இதற்கெல்லாம் உரிய கிரகமும் குருதான். ஆகையால் கல்வித் துறையில் மாற்றங்கள் போ‌ன்றவை நடக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்