தினகரனின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்த மத்திய அரசு, ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தை கையில் எடுத்து, விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி தினகரனுக்கு நெருக்கடி கொடுத்தது. அதேபோல், அந்நிய செலவாணி வழக்கை தூசி தட்டி, நீதிமன்றத்தில் அவரை நிறுத்தியது. தற்போது, இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில், பல கட்ட விசாரணைக்கு பின் அவரை திகார் சிறையிலும் அடைத்து விட்டது.