தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நீட் தேர்வு குறித்த பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகையும் காங்கிரஸ் காட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு பேசியதாவது:
கோவா, மணிப்பூரை போல தமிழகத்திலும் நுழைந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்கள், நகரங்கள் மட்டுமல்ல சென்னையில் கூட தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். கிராமங்களில் போய் பெண்களிடம் கேட்டால் வீட்டுக்கு பின்னால் குளத்தில் தாமரை கிடக்கிறது என்பார்கள்.