இந்நிலையில் முன்ஜாமின் கோரி மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முன்ஜாமின் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சசிகலா புஷ்பா உள்பட் மூன்று பேரையும் கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்திலும், அக்டோபர் 7ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு சசிகலா புஷ்பா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.