ஏர்போர்ட்டில் திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பா

சனி, 30 ஜூலை 2016 (18:27 IST)
விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
டெல்லி விமான நிலையத்தில் சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பா தமது குடும்பத்தினருடனும் காத்திருந்து உள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வாக்குவாதம் முற்றியதை அடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா விமான நிலையத்திலேயே அறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சசிகலா புஷ்பா ஏற்கனவே திருச்சி சிவாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. ஆனால் இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவா தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்