ஆளுநரை காண விமான நிலையம் விரையும் ஓ.பி.எஸ்!!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:07 IST)
இன்று பிற்பகல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். அளுநரை வரவேற்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையம் செல்கிறார்.


 
 
அதன் பின்னர் ஆளுநர் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை சந்திக்க உள்ளார். மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். பிறகு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
 
கடந்த 7 ஆம் தேதி முதல் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் ஆளுநரின் சந்திப்பு மற்றும் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்