செந்தில் பாலாஜியை கண்டு அஞ்சும் விஜய பாஸ்கர்

திங்கள், 24 அக்டோபர் 2016 (20:06 IST)
தமிழக முதல்வர் நலம் கருதி பூஜை செய்து வரும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் பதவி  பற்றிய அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலம் ஆரோக்கியம் பெற போக்குவரத்து துறை அமைச்சர் சிவ ஆலயங்களில் பூஜை செய்து வந்தார். தற்போது பெருமாள் கோயில்களிலும்  பூஜை செய்து வருகிறார்.
 
தமிழக இடைத்தேர்தல், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றிப்பெற்றால், தனது அமைச்சர் பதவியும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளார் விஜய பாஸ்கர்.
 
தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் விஜய பாஸ்கர் பதவியில் முன்பு செந்தில் பாலாஜி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அமைச்சர் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக விஜய பாஸ்கர் பயத்தில் உள்ளார்.
 
மேலும் இதனால் தான் செந்தில் பாலாஜி மீதான் வழக்கு உயர் நீதிமன்றத்தை கடந்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, விஜயபாஸ்கருக்கு ஆதரவாக உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்