என்னுடைய ஆதரவாளர்களை எனக்கு எதிராக செயல்படவும், பேசவும் வைத்ததுடன், போலீசாரையும் வரவழைத்துவிட்டனர். இதுபோன்ற செயல்களை அரங்கேற்றி என்னை பயமுறுத்தி அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சதி வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டிற்கு வரும் அவரது ஆதரவாளர்கள் கூடி நிற்கக்கூடாது என்று காவல் துறையினர் கூறியது குறித்து கேட்டபோது, “என் வீட்டுக்கு உள்ளே வர எவரையும் அனுமதிக்க முடியாது என்று காவல்துறை அதிகாரிகள் என்னிடமே கூறுகின்றனர். என் வீட்டுக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று எனக்கு தெரியும்.
என் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அரைமணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் போலீசார் கூறுகின்றனர். என் வீட்டில் உள்ளவற்றையும், அருகில் உள்ள வீடுகளில் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அப்புறப்படுத்த சொல்வது சரியல்ல. இதுபோன்று காவல்துறை அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. என் வீட்டுக்கு பாதுகாப்பும் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.