தோல்விக்கு பின்னர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு தலா 10 லட்சம் வீதம் தரப்படும் என விஜயகாந்த் கூறியதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் யாருக்கும் பணம் தரமுடியாது என விஜயகாந்த் கையை விரித்துவிட்டதாகவும், பணம் தொடர்பாக தலைமை அலுவலகத்தையும், விஜயகாந்தையும் தொடர்பு கொள்ள கூடாது என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.