முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சம்பவம் அனைத்தும் நாம் அனைவரும் அறிந்ததே. சசிகலா தலைமையை ஏற்காத தொண்டர்கள் ஜெ. அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என கூறினர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீ நகரில் உள்ள தீபா இல்லத்தில் குவியத் தொடங்கினர். விரைவில் அரசியல் திட்டம் குறித்து அறிவிப்பேன் என்று தொண்டர்களிடம் கூறிவந்தார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த 24ம் தேதி எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை தீபா தொடங்கினார். பேரவைக்கு கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலால் பெரும் சர்ச்சை எழுந்தன. தலைமைக்கு தேவைப்பட்டவர்கள் மட்டுமே நிர்வாகிகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொண்டர்கள் கூறினர்.