நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ஜெ. வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், அவரது நினைவகமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும். அதற்காக ஒரு அறப்போட்டத்தை நாங்கள் துவக்கியுள்ளோம் எனக் கூறினார்.
இந்நிலையில், அதற்காக கையெழுத்து இயக்கத்தை ஓ.பி.எஸ் இன்று தொடங்கியுள்ளார். அதேபோல், அவரது வீட்டில் ஒரு பேனரும் தயாராக வைக்கப்பட்டுள்ளது..
ஆனால், இது போட்டோஷாப் வேலை என சிலரும், இல்லை.. இல்லை.. இது கையெழுத்து இயக்கத்திற்காக வைக்கப்பட்ட பேனர் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது..