அமைச்சர்களுக்கு சசிகலா குடும்பத்தினர் போட்ட திடீர் உத்தரவு...

வியாழன், 5 ஜனவரி 2017 (11:06 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் மற்ற அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தினமும் போயஸ் கார்டனுக்கு வந்து செல்ல வேண்டும் என சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 

 
ஜெ. உயிரோடு இருந்த வரை அவரை சந்திப்பதற்காக, ஏராளமான அமைச்சர்கள் தினமும் போயஸ்கார்டன் செல்வார்கள். அவரின் மறைவிற்கு பின் அதுபோல் செல்ல தேவையில்லை என அமைச்சர்கள் நினைத்திருந்தனர்.
 
ஆனால், சசிகலா பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டவுடன், அவரை சந்திக்க போயஸ் கார்டன் செல்ல வேண்டிய நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டது.  
 
ஓ. பன்னீர் செல்வம் முதல் மற்ற அமைச்சர்கள் அனைவரும் தினமும் போயஸ்கார்டனுக்கு வந்த செல்ல வேண்டும் என சசிகலா குடும்பத்தினர் உத்தரவு பிறப்பித்துள்ளனராம். முக்கிய பணி இருந்தால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மட்டும் வரத்தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளதாம். 
 
இதனால் அனைத்து அமைச்சர்களும் தினமும் காலை போயஸ் கார்டன் சென்று விட்டு, அதன்பின் தலைமை செயலகம் செல்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்