கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலா குடும்பத்தவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக ஒதுக்கி வைத்த மூத்த அமைச்சர்கள், ஓபிஎஸ் அணியுடன் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவை மீண்டும் உருவாக்கவுள்ளதாக கூறினர். இதனடிப்படையில் ஈபிஎஸ் அணியில் இருந்து பேச்சுவார்த்தைகாக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.