அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராணுவ ரீதியாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சின்னங்கள், பதவிகள் மற்றும் பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டதுடன், அவருடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் இடைநிறுத்தப்பட்டது.