மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதனால் தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையில் இருந்து தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 3 ஆம் தேதி. மனு மீதான பரிசீலனை 4 ஆம் தேதி, வேட்புமனு திரும்பபெறுதலுக்கான கடைசி தேதி 6 ஆம் தேதி.