அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை பதிவேற்றி மிரட்டுவது, தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, மனித வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்வது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது என ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் உலகத்தை அச்சுறுத்தி வந்தனர்.
இதற்கு பாரிஸ் தாக்குதல், சீனா தேசத்தை சேர்ந்த நபர் கொலைசெய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் சரியான உதாரணம். அத்தகைய, பயங்கரத்தை அரங்கேற்றிய இயக்கத்தின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.