இன்னொரு கட்டிங் குடுங்க: ஓடும் ஃபிளைட்டில் பெண் பயணி அலப்பறை

புதன், 14 நவம்பர் 2018 (14:12 IST)
அயர்லாந்தை சேர்ந்த பெண் பயணி ஒருவர் ஓடும் ஃபிளைட்டில் மது கேட்டு ரகளை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சனிக்கிழமையன்று லண்டனலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா AI131 விமானத்தில் ஐயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்தார்.
 
அந்த பெண் விமானப் பணியாளர்களிடம் அதிக அளவு மது கேட்டதால் அவர்கள் மது கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் கடுப்பான அந்த பெண் பயணி நான் ஒரு வக்கீல் எனக்கு ஒரு கிளாஸ் மது கூட தரமாட்டீர்களா? என கண்டபடி ஊழியர்களை வசை பாடியுள்ளார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விமான நிலைய போலீஸார் அந்த பெண்மணியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்