சீனாவில் மெய்நிகரி செய்தி வாசிப்பாளர்...

வெள்ளி, 9 நவம்பர் 2018 (19:49 IST)
தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில்  அன்றாடம் காலைச் செய்திகள் வாசிக்கும் போது அன்றைய நேரத்தை பார்த்து வேலைக்குக் கிளம்பிச் செல்வோர் நம்மிடையே நிறைய மக்கள் உண்டு.
அதுவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிப்பாளர்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
 
இந்நிலையில் சீனாவில்  மனிதர் வாசிப்பதை ஒரு தொழில்நுட்பம் செய்ய ஏதுவானது என்பதை தொழில்நுட்பம் மெய்பித்துள்ளது.
 
சின்கியா எனும் ஒரு தனியார் நிறுவனம் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது.
 
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட இதை சீனாவின் தேடுபொருள் இன்ஜின் நிறுவனமான சோகோ(sogou) வடிவமைத்துள்ளது.
 
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால்  செய்தி வாசிப்பவர்களின் உடல்மொழி, உதட்டு அசைவு, மொழி உச்சரிப்பு ஆகியவற்றை எல்லாம் ஆராய்ந்து அதை வைத்து அச்சு அசலாக தானாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொழியை பதிவு செய்து விட்டால்  அது தானாக பேசி விடுகிறது.
 
இந்த செய்திவாசிப்பாளரைக் கண்டால் நிஜம் எது பொய் எது என்று கண்டுபிடிக்க முடியாத  அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.
 
சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த மெய்நிகரி பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்