ஒலியை விட எட்டு மடங்கு வேகம்; துல்லியமான தாக்குதல்! – ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை!

வியாழன், 8 அக்டோபர் 2020 (10:49 IST)
ஒலியைவிட அதிவேகமாக பயணித்து இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வெற்றி அடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கடந்த சில காலமாக ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தரையில் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்த நிலையில் கடலில் இருந்து கடல் இலக்குகளை தாக்கும் சோதனையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.

ஆர்டிக் கடல் பகுதியில் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை கடலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஹைபர்சோனிக் ஏவுகணைகளை கடல்பகுதியில் சோதித்து வெற்றி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்