ஒரே இரவில் கோடீஸ்வரர் ... இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம் !

வியாழன், 17 அக்டோபர் 2019 (20:57 IST)
இந்தியாவைச் சேர்ந்தவர் ப்ரெண்டன் லோபஸ் (27) என்பவர் துபாய் நாட்டில்  வசித்து வருகிறார்.இவர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகி உலகையே ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
இந்தியாவைச் வம்சாவளியச் சேர்ந்தவரான ப்ரெண்டன் லோபஸ் துபாய் நாட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்குள்ள லைப்ஸ்டைல் என்ற வங்கி நடத்திய ஒரு போட்டியில் பங்கேற்றார். ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் பேமண்ட் முறையில் அதிக புள்ளிகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் வங்கியால் குழக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு பெரிய பரிசுத்தொகைகள் கிடைக்கும். இந்நிலையில்  ப்ரெண்டன் லோபஸ் அதிக புள்ளிகளைப் பெற்றார். 
 
இந்நிலையில் அவருக்கு பரிசாக 6 ஏக்கர் பரப்பளவில் கனடா நாட்டிலுள்ள ஹால்பாயிண்ட் தீவு பரிசளிக்கபட்டுள்ளது.இந்த செய்தி அவருக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைவருக்குமே பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்